உங்கள் உயிரை இரத்தம் எப்படி காப்பாற்ற முடியும்? என்ற புரோஷுரைப் படிப்பதற்கு கேள்விகள்
இந்தப் படிப்புகளில் சில இடங்களில் பக்கங்கள் 27-31-லுள்ள பிற்சேர்க்கைக்கு மேற்கோளிடப்பட்டுள்ளது. குறிக்கப்பட்ட பத்திகளின் பேரில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் படிப்பில் சேர்த்துச் சொல்லப்படலாம்; நேரம் இருந்தால் பிற்சேர்க்கைப் பத்திகள்கூட வாசிக்கப்படலாம்.
முதல் வாரம்
பக்கம் 2
1-4. உயிர்களை இரத்தம் எப்படி காப்பாற்ற முடியும் என்பதை சிந்திப்பது ஏன் காலத்திற்கேற்றதானது? (பக்கம் 27, பத்திகள் 1-3-ஐ பாருங்கள்.)
பக்கம் 3
1, 2. உயிர் இரத்தத்துடன் சம்பந்தப்பட்டதாக நோக்குவது ஏன் இயற்கையான ஒன்றாகும், இந்த விஷயத்தில் கடவுள் எப்படி உட்பட்டிருக்கிறார்?
3, 4. இரத்தத்தைப் பற்றி கடவுள் சொல்ல வேண்டியது குறித்து நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
5. என்ன காரணத்திற்காக நாம் ஆதியாகமம் 9:3-6-க்கு கவனம் செலுத்த வேண்டும், அந்த உரைப்பகுதியின் முக்கியத்துவம் என்ன?
6. இரத்தத்தைக் குறித்து இஸ்ரவேலர்கள் என்ன கட்டளைக்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருந்தார்கள்?
பக்கம் 4
1, 2. கடவுளுடையச் சட்டங்கள் பூர்வ இஸ்ரவேலுக்கு எப்படி நன்மை அளித்தது, ஆனால் இஸ்ரவேல் இரத்தத்திலிருந்து விலகியிருந்ததற்கு முக்கியக் காரணம் என்ன?
3. அவசரநிலையில் இரத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்டுள்ள சட்டம் எப்படி நோக்கப்பட வேண்டியதாயிருந்தது?
பக்கம் 5
1, 2. இரத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்ட சட்டத்தைக் குறித்ததில், இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்?
3, 4. (எ) கிறிஸ்தவர்களைக் குறித்தும் இரத்தத்தைக் குறித்தும் அப்போஸ்தலர் குழுவின் ஒரு கலந்தாராய்வு என்ன தீர்மானித்தது? (பி) இரத்தத்திலிருந்து விலகியிருப்பது வெறுமென ஒரு தற்காலிகச் சட்டமா என்று நாம் எப்படி அறிய முடியும்?
5. இயேசுவின் அப்போஸ்தலர்களின்படி, இரத்தத்திலிருந்து விலகியிருப்பது எவ்வளவு முக்கியமானது?
6, 7. இரத்தத்தைப் பற்றியக் கட்டளை ஒரு நிரந்தரமானத் தேவை என்பதை என்ன கூடுதலான அத்தாட்சி காண்பிக்கிறது?
பக்கம் 6
1, 2. கிறிஸ்துவுக்கு முந்திய காலங்களில் இரத்தம் எப்படி மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டது?
3. ரோமர் காலத்தில், ஆதிக் கிறிஸ்தவர்கள் இரத்தத்தின் உபயோகத்தைக் குறித்து, மருந்தாக அதன் உபயோகத்தைக் குறித்துங்கூட எப்படி பிரதிபலித்தார்கள்?
4-6. (எ) இரத்தமேற்றுதல்களின் உபயோகம் எப்படித் துவங்கியது? (பி) கடவுளின் சட்டத்தைப் பார்க்கும்போது, குருதிநாளங்களில் இரத்தமேற்றுவது ஏன் தவறாகும்?
7. யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தமேற்றுதல்களை ஏற்க மறுக்கிறார்கள்? (பக்கம் 27, பத்திகள் 4-6, மற்றும் பக்கம் 28, பத்தி 1-ஐ பாருங்கள்.)
பக்கம் 7
1. கிறிஸ்தவர்கள் இரத்தமேற்றுதல்களைத் தவிர்ப்பதற்கு அடிப்படைக் காரணம் மதசம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும், இரத்தத்தை உபயோகிக்கும் சிகிச்சை முறையின் மருத்துவ அம்சங்களை நாம் ஏன் ஆராய்ச்சிசெய்ய வேண்டும்?
இரண்டாவது வாரம்
பக்கம் 7
2, 3. நவீன மருத்துவத்தில் இரத்தமேற்றுதல் என்ன இடத்தை வகிக்கிறது?
4, 5. இரத்தமேற்றுதல்கள் அபாயகரமானதா என்பதைச் சிந்திப்பது ஏன் நியாயமானதாக உள்ளது?
பக்கம் 8
1. இரத்தமேற்றுதல்கள் பற்றி நாம் ஞானமாக என்ன கேட்கிறோம்?
2, 3. இரத்தவகைப் பொருத்தமும் குறுக்கு ஒத்திசைவும் ஏன் அதிமுக்கியமானதானாலும் அவசியமாகவே போதுமானதல்ல?
4, 5. நோய்த் தடுக்கும் உடலின் அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஓர் இரத்தமேற்றுதல் எப்படி உண்டாக்க முடியும்?
6, 7. புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரத்தமேற்றுதல்கள் என்ன தீங்கு விளைவிக்கும்?
பக்கம் 9
1. புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மற்றும் இரத்தமேற்றுதல் பற்றிய அத்தாட்சிகளின் முக்கியத்துவம் என்ன?
2, 3. நோய்த் தடுக்கும் உடலின் அமைப்பு சம்பந்தப்பட்ட வேறு என்ன தீங்கை இரத்தமேற்றுதல்கள் விளைவிக்கலாம்?
4, 5. இரத்தமேற்றுதல்களிலிருந்து வரக்கூடிய நோயின் ஆபத்தைப் பற்றி மக்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
பக்கம் 10 (பெட்டி)
1, 2. இரத்தமேற்றுதலால் வரும் கல்லீரல் அழற்சியின் அபாயம் எவ்வளவு வினைமையானது?
3. ஒரு சமயம், இரத்தத்திலிருந்து வரக்கூடிய கல்லீரல் அழற்சியின் அபாயம் மேற்கொள்ளப்படுவதாக ஏன் தோன்றியது?
4, 5. இரத்தத்திலிருந்து வரக்கூடிய கல்லீரல் அழற்சியின் அபாயத்தை நாம் இப்போதுங்கூட அசட்டைசெய்ய முடியாது என்பதை என்ன கண்டுபிடிப்புகள் நிரூபிக்கின்றன?
6-8. கல்லீரல் அழற்சியைப் பற்றியக் கவலையானது ஏன் ஒரு கடந்தகாலக் காரியமல்ல?
பக்கம் 11
1. இரத்தத்தினால் வரும் நோயின் அபாயங்கள் மறைவதற்கில்லை என்பதை எது விளங்கச் செய்யும்?
2-4. தான் வாழும் பகுதியில் பொதுவாக இல்லாத நோய்களுக்கு ஒருவரை இரத்தம் எவ்வாறு ஆளாக்கும்? (பெட்டியையும் பாருங்கள், பக்கம் 11.)
5-7. மிகப் பரவலான தொற்று நோயாகிய எய்ட்ஸ் எப்படி புதிய, மரணம் விளைவிக்கக்கூடிய நோய்கள் இரத்தத்துடன் சம்பந்தப்படுத்தப்படலாம் என்று காண்பித்துள்ளது?
பக்கம் 12
1, 2. எய்ட்ஸ் நச்சுப் பொருளின் எதிர்ப்பு உடலிகளைக் கண்டுபிடிக்கும் சோதனைகளின் உபயோகம் இருந்தாலும் ஏன் இன்னும்கூட இரத்தம் அபாயமற்றதாக உறுதி அளிப்பதில்லை?
3-5. எய்ட்ஸ் நச்சுப் பொருளின் அபாயமானது ஏன் இந்த விவகாரத்தின் முடிவல்ல?
6, 7. இரத்தத்தால் கடத்தப்படும் நச்சுப் பொருட்களைப் பற்றி என்ன நியாயமான அக்கறையை நிபுணர்கள் கொண்டுள்ளார்கள்?
மூன்றாவது வாரம்
பக்கம் 13
1, 2. தரமான மருத்துவ அக்கறையை யார் விரும்புகிறார்கள்? இது எதை உட்படுத்தும்?
3-5. இரத்தமேற்றுதல்களுக்கு பதில் மாற்று உபாயங்கள் உள்ளன என்பதை நீங்கள் எப்படி விளக்கிக்காட்டலாம்?
6-8. இரத்தம் எப்போது அடிக்கடி ஏற்றபட்டுகிறது? ஆனால் இந்தப் பழக்கம் ஏன் நல்ல ஆதாரமற்று இருக்கிறது?
பக்கம் 14
1. பொதுவாக தேவைப்படும் ஹிமோக்ளோபின் அளவுக்கு குறைவானதும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பதை எது காண்பிக்கிறது?
2, 3. விரைவாக இரத்தம் இழக்கப்படும்போது, என்ன தேவைப்படுகிறது? இந்தப் பிரச்னையில் எப்படி சிகிச்சையளிக்கலாம்?
4. இரத்தமற்ற பரிமாணப் பதிலீடு செய்யும் திரவங்கள் ஏன் பயனாற்றல் மிகுந்தவையாக உள்ளன?
5. சிவப்பணுக்களின் இழப்பைச் சமாளிக்க மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு எப்படி உதவ முடியும்?
பக்கம் 15
1. சிவப்பணுக்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்த என்ன செய்யப்படலாம்?
2-4. அறுவை சிகிச்சையின்போது, இரத்த இழப்பை எப்படி குறைக்கலாம்?
பக்கம் 16
1-3. இரத்தமேற்றுதல்கள் இல்லாமல் பெரிய அறுவை சிகிச்சை சாத்தியமாகும் என்பதை என்ன அத்தாட்சி காண்பிக்கிறது?
4-6. இரத்தம் உபயோகிக்காமல் என்ன பல விதமான அறுவை சிகிச்சை முறை சாத்தியமாகும்? (பக்கம் 28, பத்திகள் 2-4-ஐ பாருங்கள்.)
பக்கம் 17
1. இரத்தம் செலுத்தப்படாத இருதய அறுவை சிகிச்சையில் என்ன நல்ல நன்மைகள் கிடைக்கப் பெற்றன?
2-4. இரத்தமற்ற அறுவை சிகிச்சையில் அடிக்கடி அனுபவிக்கப்படும் மிக அருமையான விளைவுக்கு சாட்சி நோயாளிகள் எப்படித் தாங்களாகவே உதவுகிறார்கள்?
நான்காவது வாரம்
பக்கம் 17
5, 6. ஆபத்து/நன்மை ஆராய்ச்சி என்பதென்ன? அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது?
பக்கம் 19
1, 2. ஆபத்து/நன்மை ஆராய்ச்சியில் நோயாளி என்ன பங்கு வகிக்கிறார்?
3-5. ஆபத்துகளையும் நன்மைகளையும் எடைபோடுவதில் இரத்த சிகிச்சை முறை சரியாகவே ஏன் உட்படுத்தப்பட்டது? (பக்கம் 31, பத்திகள் 1, 2-ஐ பாருங்கள்.)
6. மருத்துவ சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்வதில் உங்கள் உரிமையின்மீது என்ன சட்டப்பூர்வமானக் கோட்பாடு வருகிறது? (பக்கம் 30, பத்திகள் 1-8-ஐ பாருங்கள்.)
பக்கம் 18 (பெட்டி)
1-4. மருத்துவ அலுவலரின் சட்டம் சம்பந்தமானக் கவலைகளைப் போக்க சாட்சிகளாக இருக்கும் நோயாளிகள் என்ன செய்கிறார்கள்? (பக்கம் 28, பத்தி 5-ஐ பாருங்கள்.)
5-7. சட்டம் சம்பந்தப்பட்ட கவலைகளைப் போக்க சாட்சிகள் செய்வதைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களும் மருத்துவமனைகளும் ஒத்துழைப்பது ஏன் நியாயமான ஒன்றாக இருக்கிறது?
பக்கம் 20
1-3. சாட்சிகள் எடுக்கும் நிலைநிற்கையைக் குறித்து சில மருத்துவ அலுவலர் எப்படிப் பிரதிபலித்துள்ளார்கள்?
4, 5. சாட்சிகளாக இருக்கும் சில நோயாளிகளின் வழக்கில் எப்படி நீதிமன்றங்கள் உட்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது?
பக்கம் 21
1, 2. சாட்சிகளும் இரத்தமும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாள நீதிமன்றங்களுக்குச் செல்வது ஏன் சிறந்த வழியல்ல?
3, 4. நோயாளி சிறு பிள்ளையாக இருந்தபோதிலும் நீதிமன்றங்களிடமாகத் திரும்பவது என்ன காரணங்களால் சரியாகாது?
5, 6. சிறு பிள்ளைகளுக்குச் சிகிச்சைமுறையை தேர்வுசெய்வதில் என்ன பெற்றோருக்கான உரிமை செயல்பட வருகிறது? (பக்கம் 28, பத்தி 6, மற்றும் பக்கம் 29, பத்தி 1-ஐ பாருங்கள்.)
பக்கம் 22
1-4. தங்களுடையப் பிள்ளைகளுக்கான மருத்துவ சிகிச்சைப் பற்றியத் தீர்மானங்களைச் செய்ய பெற்றோர் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்துக்காட்டும் சில குறிப்புகள் யாவை?
5. ஏன் சாட்சி பெற்றோர்களும் மருத்துவ அலுவலரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்?
ஐந்தாவது வாரம்
பக்கம் 22
6, 7. இரத்தத்தைக் குறித்தும் இரத்தமற்ற மருத்துவ சிகிச்சையளிப்பதைப் பற்றிய சாட்சியின் வேண்டுகோள் குறித்தும் என்ன முக்கியமான விவரங்களை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும்?
பக்கம் 23
1-3. இரத்தத்தை மறுத்து சிலர் இறந்தாலும், நாம் எதை கவனியாமல் இருக்கக்கூடாது? (பக்கம் 29, பத்திகள் 2-5, மற்றும் பக்கம் 31, பத்திகள் 3-5-ஐ பாருங்கள்.)
4, 5. மரணம் மற்றும் இரத்தம் பற்றிய உண்மை சார்ந்த நிலைநிற்கை என்ன?
பக்கம் 24
1, 2. இரத்தம் எப்படி உண்மையிலேயே உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதைப் போற்ற நமக்கு எது உதவும்?
3, 4. கிறிஸ்துவுக்கு முந்திய காலங்களில், இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கருத்து என்ன? ஏன்?
பக்கம் 25
1. பாவநிவாரண நாளன்று இரத்தம் எப்படி உட்பட்டிருந்தது? நாம் ஏன் இதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
2, 3. பாவநிவாரண நாளிற்கும் இயேசு வகித்த பங்கிற்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்கிறது?
4. (எ) கிறிஸ்தவர்கள் இரத்தத்தைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணமென்ன? (பி) இரத்தமேற்றுதல்களின் ஆபத்துக்களைப் பற்றி நாம் ஏன் அதிகமாக அழுத்தி கூறக்கக்கூடாது?
5, 6. (எ) கடவுளுடன் நாம் கொண்டிருக்கும் நிலைநிற்கையுடன் இரத்தம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது? (பி) இரத்தத்தைப் பற்றிய நம் நோக்குநிலையின் மையக்கருத்தாக நாம் என்ன போதனையைப் புரிந்துகொள்ளவேண்டும்?
7. இரத்தத்தைப் பற்றிய சாட்சிகளின் நிலையானது உயிருக்கு மதிப்பை காண்பிக்கிறது என்று நாம் ஏன் சொல்லலாம்?
பக்கம் 26
1, 2. நம்முடைய நித்திய எதிர்காலத்தைக் குறித்ததில் இரத்தம் எப்படி உட்பட்டிருக்கிறது?