நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
இந்த வருட நினைவு ஆசரிப்பு ஏப்ரல் 1, வியாழக்கிழமை அன்று வருகிறது. பின்வரும் காரியங்களுக்கு மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை நிர்ணயிக்கையில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே சின்னங்கள் சுற்றுமுறையில் அனுப்பப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
◼ ஆசரிப்பின் சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றி பேச்சாளர் உட்பட எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும்.
◼ தகுந்த அப்பமும் திராட்ச ரசமும் பெற்று தயாராய் வைக்க வேண்டும்.—பிப்ரவரி 15, 1985, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கம் 19-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், கிளாஸ்கள், பொருத்தமான மேஜை, மேஜை விரிப்பு ஆகியவற்றை மன்றத்திற்கு கொண்டுவந்து முன்னதாகவே அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடத்தும் இடத்தை முன்னதாகவே நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
◼ அட்டண்டன்ட்களையும் பரிமாறுபவர்களையும் தெரிவு செய்து, அவர்களுடைய பொறுப்புகளையும் அதைச் செய்யவேண்டிய சரியான முறையையும் பற்றி அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்.
◼ வியாதிப்பட்ட அல்லது ஆஜராக முடியாத அபிஷேகம் செய்யப்பட்ட நபர் யாராவது இருந்தால் அவருக்கும் பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்க திட்டமிட்டிருந்தால் சபைகளிடையே நல்ல ஒத்துழைப்பு அவசியம். அப்போதுதான், வராண்டாவிலோ நுழைவாயிலிலோ, நடைபாதையிலோ, வாகனங்கள் நிறுத்துமிடங்களிலோ தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.