கல்லறை
யூதர்கள் பொதுவாக இறந்தவர்களைக் குகைகளிலோ, பாறைகளில் வெட்டப்பட்ட அறைகளிலோ அடக்கம் செய்தார்கள். ராஜாக்களின் கல்லறைகளைத் தவிர மற்றவை நகரங்களுக்கு வெளியில் இருந்தன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யூதர்களின் கல்லறைகளை வைத்துப் பார்க்கும்போது, அவை மிக எளிமையாக இருந்தன என்று தெரிகிறது. யூதர்கள் இறந்தவர்களை வழிபடாததாலும், மரணத்துக்குப் பிறகு ஒருவர் எங்கோ வாழ்கிறார் என்று நம்பாததாலும் அவர்களுடைய கல்லறைகள் அப்படி எளிமையாக இருந்திருக்கலாம்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: