உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 102
  • உயிர்த்தெழுதல் மகிழ்ச்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர்த்தெழுதல் மகிழ்ச்சி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையின் வல்லமை
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • ஒரே பரிகாரம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் வலிமை
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • ஷியோல் மற்றும் ஹேடீஸ் என்றால் என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 102

பாட்டு 102

உயிர்த்தெழுதல் மகிழ்ச்சி

(வெளிப்படுத்துதல் 20:13)

1. லாசரு தூங்கினான்

கல்லறையிலே.

சகோதரிகளும்

துக்கித்தனரே!

‘இயேசு முன்

வந்திருந்தால் மரித்திரான்,

அவன் ஹேடீஸிற்குள்

பிரவேசித்திரான்.’

கல்லறைக்கு நண்பர்

இயேசு சென்றாரே,

‘லாசருவெளிவா!’

என்றழைத்தாரே.

மரித்த லாசரு

கீழ்ப்படிந்தானே.

நண்பர்கட்கு

அன்று மகிழ்ச்சிதானே!

2. இயேசு மரித்ததும்

அவர் சீஷர்கள்

விடுதலை இல்லை

என்றெண்ணினார்கள்.

அவரை கல்லறையிலே

வைத்தார்கள்.

அவர்கள் துயரில்

ஆழ்ந்திருந்தார்கள்!

ஹேடீஸோ

வைத்துக்கொண்டில்லை தனக்குள்,

தேவன் எழுப்பினார்

மூன்றே நாளிற்குள்.

அதைப்பார்த்த

சீஷர் மகிழ்கின்றாரே.

இயேசு ஹேடீஸின்

சாவியைப் பெற்றாரே.

3. ஆதாம் பாவத்தால்

மரணம் வந்தது.

உயிர்த்தெழுதல்

இயேசுவால் வந்தது.

மரித்தவர்கள்

அவர்சத்தம் கேட்பர்,

குறித்தகாலத்தில்

எழுந்திருப்பர்.

தேவசிங்காசனம்

முன்நின்றிடுவர்,

தாங்கள் செய்தவை

பேரில்தீர்ப்படைவர்.

ஜீவபுத்தகத்தில்

பெயர்பெற்றோரே

புதிய பூமியில்

என்றும் வாழ்வரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்