உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • yc பாடம் 12 பக். 26-27
  • தைரியமான பையன் பவுலைக் காப்பாற்றினான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியமான பையன் பவுலைக் காப்பாற்றினான்
  • செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • இதே தகவல்
  • பவுலுடைய சகோதரியின் மகன்—மாமாவின் உயிரைக் காப்பாற்றினான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • தைரியமாயிருங்கள்​—யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • யெகோவாவின் ராஜ்யத்தைத் தைரியமாகப் பிரசங்கித்தல்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
yc பாடம் 12 பக். 26-27
பவுலோட சொந்தக்கார பையன் தளபதிகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்

பாடம் 12

தைரியமான பையன் பவுலைக் காப்பாற்றினான்

ஒரு பையன் அவனோட மாமா உயிரை காப்பாத்தினான். அந்த தைரியமான பையனை பத்தி இப்போ படிக்கப் போறோம். அவன் பேரு பைபிள்ல இல்லை. அவனோட மாமாதான் அப்போஸ்தலன் பவுல். சரி, அவன் எப்படிப் பவுலை காப்பாத்தினான்? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா?—

எருசலேம் ஊர்ல இருந்த ஜெயில்ல பவுல் இருந்தார். ஏன் தெரியுமா? இயேசுவை பத்தி மக்கள்கிட்ட பவுல் சொன்னார். அதனால அவரை தூக்கி ஜெயில்ல போட்டுட்டாங்க. பவுலை கொல்ல கெட்டவங்க சில பேர் திட்டம் போட்டாங்க. ‘பவுலை விசாரிக்கணும், கூட்டிட்டு வாங்கனு தளபதிகிட்ட சொல்லலாம். கூட்டிட்டு வரும்போது வழியிலயே அவங்களை மடக்கி, பவுலை கொலை பண்ணிடலாம்’னு பேசிகிட்டாங்க.

ஜெயில்ல இருக்கிற பவுல்கிட்ட அவரோட சொந்தக்கார பையன் பேசிக்கிட்டு இருக்கான்

கெட்டவங்க போட்ட திட்டத்தை அந்தப் பையன் பவுல்கிட்டயும் தளபதிகிட்டயும் சொல்கிறான்

பவுலோட சொந்தக்காரப் பையனுக்கு இது எப்படியோ தெரிஞ்சிடுச்சி. அவன் என்ன செய்தான் தெரியுமா? நேரா ஜெயிலுக்குப் போனான். விஷயத்தைப் பவுல்கிட்ட சொன்னான். ‘உடனே தளபதிகிட்ட இதை சொல்லு’னு பவுல் சொன்னார். தளபதினா ரொம்ப முக்கியமான ஆள். தளபதிகிட்ட போய் சொல்ல அந்தப் பையனுக்குப் பயமா இருந்துச்சா?— ஆமா. பயமா இருந்தாலும், அவன் தைரியமா போய் சொன்னான்.

அன்னிக்கு ராத்திரியே அந்தத் தளபதி செசரியா-னு ஒரு ஊருக்குப் பவுலை அனுப்பி வைச்சார். பவுலுக்குத் துணையா கிட்டத்தட்ட 500 வீரர்களை அனுப்பினார். பவுல் பத்திரமா ஊருக்குப் போனாரா?— ஆமா, கெட்டவங்களால பவுலை கொல்ல முடியல. அவங்க திட்டம் போட்ட மாதிரி எதுவுமே நடக்கல.

இந்தக் கதையில நீ என்ன கத்துக்கிட்ட?— நீயும் அந்தப் பையன் மாதிரி தைரியமா இருக்கணும். யெகோவாவை பத்தி எல்லார்கிட்டயும் தைரியமா பேசணும். நீ எப்பவும் யெகோவாவை பத்தி தைரியமா பேசுவியா?— அப்படிச் செய்தா, நீயும் மத்தவங்க உயிரை காப்பாத்தலாம்.

பைபிளில் படிங்க

  • அப்போஸ்தலர் 23:12-24

  • மத்தேயு 24:14; 28:18-20

  • 1 தீமோத்தேயு 4:16

கேள்விகள்:

  • கெட்டவங்க என்ன திட்டம் போட்டாங்க?

  • பவுலோட சொந்தக்காரப் பையன் என்ன செய்தான்? அதுக்கு ஏன் தைரியம் வேணும்?

  • அந்தப் பையனை மாதிரி நீ எப்படித் தைரியமா இருக்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்