உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 2 பக். 12-13
  • சாவதே மேல் என்று தோன்றும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாவதே மேல் என்று தோன்றும்போது
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உதவிக்கு எங்கே போவது?
  • நிரந்தர தீர்வு கிடைக்குமா?
  • நாமனைவரும் ஏன் கடவுளைத் துதிக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • மனச்சோர்வு மனதை என்ன செய்யும்?
    விழித்தெழு!—2009
  • மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்
    விழித்தெழு!—1988
  • ‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 2 பக். 12-13
ஒரு பெண் பைபிளைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து, தூரத்தில் பார்க்கிறார்

சாவதே மேல் என்று தோன்றும்போது

“நான் கொஞ்சம்கூட நிம்மதி இல்லாம தவிச்சேன். அதனால, வாழ்க்கைய முடிச்சுக்கணும்னு நினைச்சேன்” என்று சொல்கிறார் பிரேசிலைச் சேர்ந்த ஆட்ரியானா.

நீங்கள் எப்போதாவது, ‘வாழ்க்கையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்’ என்று நினைத்தது உண்டா? அப்படியென்றால், ஆட்ரியானாவின் குமுறல்கள் உங்களுக்கும் புரியும். உச்சக்கட்ட கவலையிலும் சோகத்திலும் விரக்தியிலும் அவள் தவித்தாள். அவளுக்குத் தீராத மன உளைச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பானைச் சேர்ந்த அலோக், உடம்பு சரியில்லாமல் இருந்த வயதான அம்மா அப்பாவைக் கவனித்துக்கொண்டார். அவர் சொல்கிறார்... “அந்த சமயத்துல எனக்கு ஆபீசுல தலைக்குமேல வேல இருந்துச்சு. போகப்போக, டென்ஷன்ல சாப்பாடுகூட இறங்கல. கொஞ்சம்கூட தூக்கமே வரல. இப்படியொரு வாழ்க்கை வாழ்றதுக்கு பேசாம செத்துப்போயிட்டா எவ்ளோ நிம்மதியா இருக்கும்னு யோசிச்சேன்.”

நைஜீரியாவைச் சேர்ந்த மார்க் என்பவர் சொல்கிறார்... “என் மனசு பாரமாவே இருந்துச்சு. நான் அழாத நாளே இல்ல. அதனால, எப்படி தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.” நல்லவேளை, மேலே நாம் பார்த்த மூன்று பேரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால், ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான ஆட்கள் அந்த விபரீத முடிவை எடுக்கிறார்கள்!

உதவிக்கு எங்கே போவது?

தற்கொலை செய்துகொள்கிறவர்களில் முக்கால்வாசி பேர் ஆண்கள். பெரும்பாலும், உதவி கேட்பதை அவமானமாக நினைத்துத்தான் அவர்கள் அந்தத் தவறான முடிவுக்குப் போகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு மருத்துவர் தேவை என்று இயேசு சொன்னார். (லூக்கா 5:31) அதனால், உங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்தால், உதவி கேட்கத் தயவுசெய்து வெட்கப்படாதீர்கள். மனச்சோர்வில் அவதிப்படுகிற நிறைய பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் பலன் தந்திருக்கின்றன. மேலே நாம் பார்த்த மூன்று பேரும் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொண்டார்கள்; அதனால், இப்போது நன்றாக முன்னேறி வருகிறார்கள்.

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் மருந்து மாத்திரைகளைத் தரலாம் அல்லது மனநல ஆலோசனைகளைக் கொடுக்கலாம். சிலசமயம், இந்த இரண்டு விதங்களிலுமே அவர்கள் சிகிச்சை தரலாம். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் சாய உறவுகள் தேவை, தூக்கி நிறுத்த தோழர்கள் தேவை. அதனால், குடும்பத்தில் இருக்கிறவர்களும் நண்பர்களும் அவர்களுக்குக் கரிசனையோடும் அனுதாபத்தோடும் பொறுமையோடும் உதவி செய்ய வேண்டும். அதேசமயத்தில், யெகோவா தேவனைப் போல ஒரு நண்பர் யாருக்குமே கிடைக்க முடியாது! அவர் பைபிளின் மூலம் அற்புதமான விதத்தில் உதவி செய்கிறார்.

நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் ரொம்பக் காலத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கலாம். அதோடு, சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப் பாணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். நீங்களும் மனச்சோர்வில் வாடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள், மார்க்கைப் போலவே நீங்களும், இனி வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். அவர் சொல்கிறார்... “உலகத்தில் இருக்கிற யாருமே, ‘எனக்கு உடம்பு சரியில்லை’னு சொல்ல மாட்டாங்கனு ஏசாயா 33:24 சொல்லுது. அந்தக் காலத்துக்காகத்தான் நான் ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன்.” பூமியில் நிலைமைகள் தலைகீழாக மாறும் என்றும், அப்போது ‘வேதனையே’ இருக்காது என்றும் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:1, 4) மார்க்கைப் போலவே நீங்களும் இதை நினைத்து சந்தோஷப்படுங்கள். இனி உடலிலும் மனதிலும் யாருக்கும் எந்த விதமான வலியும் இருக்காது. உங்கள் மனக்காயங்கள் நிரந்தரமாக ஆறிவிடும். முன்பு பட்ட வேதனைகள் இனி உங்கள் ‘மனதுக்கு வராது, [உங்கள்] நெஞ்சத்தையும் வாட்டாது.’—ஏசாயா 65:17.

மனக்காயத்துக்கு மருந்து

கடவுள் உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்.

“யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”​—ஏசாயா 41:13.

நம்முடைய உணர்ச்சிகளை வேறு யாரையும்விட கடவுளாகிய யெகோவா நன்றாகப் புரிந்துகொள்கிறார். நமக்கு உதவி செய்யவும் ஆசைப்படுகிறார்.

கடவுளுடைய வார்த்தையை ஆழமாக யோசியுங்கள்.

“[எலியா] தான் சாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டினார். ‘ . . . யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்’ . . . என்று வேண்டினார்.”​—1 ராஜாக்கள் 19:4.

மார்க் சொல்கிறார்... “பைபிள் வசனங்கள ஆழமா யோசிச்சு பார்த்தப்போ ஆறுதலா இருந்துச்சு. எலியா தீர்க்கதரிசிகூட ஒரு சமயத்துல என்னை மாதிரியே உணர்ந்திருக்காருன்னு தெரிஞ்சுகிட்டேன்.”

பைபிள் உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

“‘நீ [அதாவது, பேதுரு] விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன் . . . ’ என்று [இயேசு] சொன்னார்.”​—லூக்கா 22:32.

இயேசுவைத் தெரியாதென்று மூன்று முறை சொன்ன பிறகு, அப்போஸ்தலன் பேதுரு குற்றவுணர்ச்சி தாங்காமல் கதறி அழுதார். அதைப் படித்தபோது எப்படி இருந்ததென்று அலோக் சொல்கிறார்... “யெகோவாவும் இயேசுவும் எந்தளவுக்கு பேதுருவோட உணர்ச்சிகள புரிஞ்சுக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அது எனக்கு ஆறுதலா இருந்துச்சு.”

முன்பு பட்ட வேதனைகள் இனி உங்கள் ‘மனதுக்கு வராது, [உங்கள்] நெஞ்சத்தையும் வாட்டாது.’ —ஏசாயா 65:17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்