ஒரு இளம் சகோதரி தன் வகுப்பில் படைப்பைப் பற்றி பேசுகிறார்
இப்படிப் பேசலாம்
இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
கேள்வி: நாம யாருமே சாகணும்னு நினைக்க மாட்டோம். குடும்பத்தோட எப்பவும் சந்தோஷமா வாழணும்னுதான் ஆசைப்படுவோம். சாவே இல்லாத ஒரு காலம் வந்தா எப்படி இருக்கும்?
வசனம்: யோவா 5:28, 29
பிரசுரம்: நமக்கு உயிர் கொடுத்த கடவுளால, இறந்தவங்க எல்லாரையும் திரும்ப உயிரோடு கொண்டுவர முடியும்னு இந்த துண்டுப்பிரதி சொல்லுது. [ஒருவேளை அந்த நபரிடம் இன்டர்நெட் வசதி இருந்தால், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிற்றேட்டை அல்லது பொது இதழ் காவற்கோபுரம் எண் 3, 2016-ஐ jw.org வெப்சைட்டில் இருந்து காட்டுங்கள்.]
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
கேள்வி: கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா என்ன செய்யணும்?
வசனம்: எபே 5:33
உண்மை: கணவனும் மனைவியும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பும் மரியாதையும் காட்டுனா கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். [ஒருவேளை அந்த நபரிடம் இன்டர்நெட் வசதி இருந்தால், மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிற்றேட்டை jw.org வெப்சைட்டில் இருந்து காட்டுங்கள்.]
உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? (kt)
கேள்வி: நமக்கு தாங்கமுடியாத கஷ்டமும் வேதனையும் வரும்போது நாம கடவுள்கிட்ட வேண்டுவோம். ஆனா, அதையெல்லாம் கடவுள் கேட்குறாருனு நினைக்கிறீங்களா?
வசனம்: 1யோ 5:14
பிரசுரம்: கடவுள் நம்ம ஜெபத்தை கேட்கணும்னா நாம என்ன செய்யணும்னு இந்த துண்டுப்பிரதி சொல்லுது. [அந்த நபர் ஆர்வம் காட்டினால் பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.