உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூலை பக். 7
  • யெகோவா தம் மக்களைப் பாதுகாக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தம் மக்களைப் பாதுகாக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • துன்பத்தின் மத்தியிலும் உயிருள்ள விசுவாசம்
    விழித்தெழு!—2000
  • பைபிள் என்ன சொல்கிறது?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • படுகொலையின் காணக்கூடிய அத்தாட்சி
    விழித்தெழு!—1994
  • நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூலை பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவா தம் மக்களைப் பாதுகாக்கிறார்

இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்த ஓர் அப்பாவும் மகனும் தங்கள் வீட்டின் கதவு நிலைகளில் ரத்தத்தைத் தெளிக்கிறார்கள்.

முதல் முறையாக கொண்டாடப்பட்ட பஸ்கா ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அன்று ராத்திரி, தன்னுடைய மூத்த மகன் இறந்துபோனது தெரிந்தவுடன், “புறப்பட்டுப் போங்கள். நீங்களும் மற்ற இஸ்ரவேலர்களும் என்னுடைய ஜனங்களின் நடுவிலிருந்து போய்விடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, போய் யெகோவாவை வணங்குங்கள்” என்று பார்வோன் மோசேயிடம் சொன்னான். (யாத் 12:31) யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார் என்பதைக் காட்டினார்.

யெகோவாவின் மக்களுடைய நவீன கால சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால், அவர் தொடர்ந்து தன் மக்களை வழிநடத்தி பாதுகாத்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகத் தலைமையகத்தில், ‘யெகோவாவுடைய பெயருக்கென்று ஒரு ஜனம்’ என்ற மியூசியத்தில் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

வார்விக் மியூசியத்திற்கு ஒரு சுற்றுலா: ‘யெகோவாவுடைய பெயருக்கென்று ஒரு ஜனம்’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷனின்’ விளம்பர போஸ்டரும் அதன் ஸ்லைடுகளும்

    பைபிள்மேல் மற்றவர்களுடைய விசுவாசத்தை வளர்க்க, 1914-லிருந்து என்ன புதிய முறையை பைபிள் மாணாக்கர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள், அதனால் என்ன பலன் கிடைத்தது?

  • 1918-ல் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள்.

    1916 மற்றும் 1918-ல் என்ன சோதனைகள் வந்தன, அமைப்பை யெகோவாதான் வழிநடத்துகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சிகள் இருந்தன?

  • விசுவாசத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட சகோதர சகோதரிகளைப் பற்றிய அருங்காட்சி. பூஞ்சோலையைச் சித்தரிக்கும் அறையின் கதவுகள் திறக்கின்றன.

    எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவின் மக்கள் எப்படி விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்?

  • 1930-களிலும் 1940-களிலும் பயன்படுத்தப்பட்ட சில ஊழிய முறைகளைப் பற்றிய அருங்காட்சி.

    1935-ல் யெகோவாவின் மக்கள் என்ன புதிய புரிந்துகொள்ளுதலைப் பெற்றார்கள், இது அவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

  • நீங்கள் இந்த மியூசியத்தை சுற்றிப் பார்த்திருந்தால், எந்த விஷயம், யெகோவா தன் மக்களை வழிநடத்தி பாதுகாத்து வருகிறார் என்பதில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியது?

மியூசியத்தைச் சுற்றிப் பார்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள jw.org®-ல் “எங்களைப் பற்றி” என்ற பகுதியில் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்