உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp25 எண் 1 பக். 4-5
  • போரின் பின்விளைவுகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போரின் பின்விளைவுகள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
  • இதே தகவல்
  • போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • போருக்கு கோடிக்கணக்கில் செலவு​—இழந்தது பணம் மட்டும்தானா?
    வேறுசில தலைப்புகள்
  • போர் வேரோடு அழிக்கப்படும்​—எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
  • போர்
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
wp25 எண் 1 பக். 4-5
படத்தொகுப்பு: 1. வயலில் ஒரு ராணுவ வீரர் நடந்துபோகிறார், அவருக்குப் பின்னால் ஒரு பீரங்கி போகிறது. 2. போரால் பாதிக்கப்பட்ட வித்தியாசமான நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள்.

போரின் பின்விளைவுகள்

“இரண்டாம் உலகப் போருக்கு பின்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு போர்கள் இப்போது இந்த உலகத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. கிட்டத்தட்ட உலக மக்கள்தொகையில் கால்வாசி பேர், அதாவது 200 கோடி மக்கள், போர் நடக்கும் பகுதியில் வாழ்கிறார்கள்.”

ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் அமினா ஜே. முகமது, ஜனவரி 26, 2023.

அமைதிப் பூங்காவாக இருக்கிற இடங்களில் கூட எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம். போர் நடக்கும் இடங்களிலிருந்து தொலைதூரத்தில் இருப்பவர்கள்கூட பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அரசியல், வியாபாரம், தொழில்நுட்பம் போன்ற பல விஷயங்களால் இந்த உலகம் இணைக்கப்பட்டிருக்கிறது. போர் ஓய்ந்தாலும் அதன் பின்விளைவுகள் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கின்றன. அதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

  • இரண்டு கைகள் ஒரு காலியான பாத்திரத்தை பிடித்திருப்பதைக் காட்டும் சின்னம்.

    உணவு பற்றாக்குறை. “இன்றைக்கும் பசி பட்டினிக்கான முக்கிய காரணமே போர்தான். உலகத்தில் உணவு கிடைக்காமல் திண்டாடுகிற 70 சதவீத மக்கள் போர் நடக்கிற இடத்தில்தான் வாழ்கிறார்கள்” என்று உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை சொல்கிறது.

  • சோகமாக இருக்கும் பெண் தன் கைகளால் முகத்தை மூடியிருப்பதைக் காட்டும் சின்னம்.

    உடல்நல மனநல பிரச்சினைகள். ஒரு இடத்தில் போர் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தாலே அங்கிருக்கிற மக்களுக்கு மன அழுத்தமும் பதற்றமும் ஏற்படும். போரின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் நிறைய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை.

  • ஒரு குடும்பத்தார் தங்களுடைய சாமான்களை பெரிய மூட்டைகளில் வைத்து சுமந்து செல்வதைக் காட்டுகிற சின்னம்.

    அகதிகளாக தள்ளப்படும் நிலைமை. செப்டம்பர் 2023-ன் கணக்குப்படி, உலகம் முழுவதும் 11.4 கோடிக்கும் அதிகமானவர்கள் தங்கள் நாட்டையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சொல்கிறது. இதற்கு முக்கியமான காரணமே போர்தான்.

  • தங்களுடைய எளிமையான வீட்டுக்கு வெளியே ஒரு குடும்பம் நிற்பதைக் காட்டுகிற சின்னம்.

    பொருளாதார நெருக்கடி. போர் நடப்பதால் பணவீக்கம் ஏற்படும், அதாவது விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயரும். மருத்துவம், கல்வி போன்ற சேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை அரசாங்கம் ராணுவத்துக்கு செலவழிக்கலாம். போரால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கும் எக்கச்சக்கமாக செலவாகலாம். இதனால் மக்கள் பாடுதான் பெரும் திண்டாட்டமாகிறது.

  • குழாயில் எண்ணெய் கசிவதைக் காட்டுகிற சின்னம்.

    சுற்றுச்சூழல் பிரச்சினை. இயற்கை வளங்களை போர் நாசப்படுத்துவதால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிர்வாழ மிகவும் அவசியமான நிலம், நீர், காற்று மாசுபடுவதால் நீண்ட கால உடல்நல பிரச்சினைகள் வருகின்றன. போர் முடிந்த பின்பும், புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

உண்மைதான், போர் பேரழிவையும் பெரும் செலவையும் ஏற்படுத்துகிறது.

போரும் பைபிள் தீர்க்கதரிசனமும்

“இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கு,” அதாவது நாம் வாழ்கிற காலகட்டத்துக்கு, போர்களும் ஒரு அடையாளமாக இருக்கும் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. (மத்தேயு 24:3) இயேசு கிறிஸ்து இதைப் பற்றி இப்படி சொன்னார்:

  • “போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். . . ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்.”—மத்தேயு 24:6, 7.

  • “போர்களைப் பற்றியும் கலவரங்களைப் பற்றியும் கேள்விப்படும்போது திகிலடையாதீர்கள்.”—லூக்கா 21:9.

    “கலவரங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல மொழிச் சொல், சீர்குலைவுகள், எழுச்சிகள், அதிகாரத்துக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்பு மற்றும் வன்முறை போராட்டங்களைக் குறிக்கலாம்.

அதிகம் தெரிந்துகொள்ள “‘கடைசி நாட்கள்’ அல்லது ‘கடைசிக் கட்டத்தின்’ அடையாளம் என்ன?” என்ற கட்டுரையை jw.org-ல் வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்