பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 11-15
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார்
தன்னை உயிரோடு எழுப்ப கடவுளால் முடியும் என்று யோபு நம்பினார்
தன்னை உயிரோடு எழுப்ப கடவுளால் முடியும் என்பதைப் புரிய வைக்க ஒரு மரத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தினார். அது ஒருவேளை ஒலிவ மரமாக (Olive tree) இருக்கலாம்
ஒலிவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரந்து விரிந்து இருப்பதால் அதை அடியோடு வெட்டினாலும் அது மறுபடியும் வளரும். வேர்கள் உயிரோடு இருந்தால் மட்டும் போதும், அந்த மரம் மறுபடியும் துளிர்க்கும்
கடுமையான வறட்சிக்கு பிறகு மழை பெய்யும்போது, காய்ந்துபோன ஒலிவ மரத்தின் வேர்கள் துளிர் விடும். “ஒரு புது செடியில் கிளைகள்” வளருவது போல் வளரும்