உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 12-13
  • பெரியவர்களின் வழிகாட்டுதலை மதிப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெரியவர்களின் வழிகாட்டுதலை மதிப்பது
  • விழித்தெழு!—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிள்ளைகளுக்கு யாருடைய வழிகாட்டுதல் தேவை?
  • பெரியவர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
  • வழிகாட்டுவது எப்படி?
  • பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி நல்வழி காட்டலாம்?
    குடும்ப ஸ்பெஷல்
  • டீன்ஏஜ் அடுத்த பருவத்திற்கு அடித்தளம்
    விழித்தெழு!—2011
  • பிள்ளை வளர்ப்புக்கு நம்பகமான ஆலோசனை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பிரிந்து செல்ல பயிற்சி
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 12-13
ஒரு பெண் தன்னுடைய பழைய ஃபோட்டோக்களை ஒரு பிள்ளையிடம் காட்டுகிறாள்

பாடம் 5

பெரியவர்களின் வழிகாட்டுதலை மதிப்பது

பிள்ளைகளுக்கு யாருடைய வழிகாட்டுதல் தேவை?

பிள்ளைகளுக்குப் பெரியவர்களின் ஆலோசனைகளும் புத்திமதிகளும் தேவை. அந்தப் பொறுப்பைச் செய்யத் தகுந்தவர்கள் பெற்றோர்களாகிய நீங்கள்தான். சொல்லப்போனால், அப்படிச் செய்வது உங்கள் கடமை. ஆனால், அனுபவமுள்ள மற்றவர்கள்கூட உங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனைகள் தரலாம்.

பெரியவர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?

நிறைய நாடுகளில், பிள்ளைகள் பெரியவர்களோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்:

  • பிள்ளைகள் வீட்டில் இருப்பதைவிட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களையும் மற்றவர்களையும்விட பிள்ளைகள்தான் அதிகம்.

  • சில வீடுகளில் அப்பா, அம்மா இரண்டு பேருமே வேலைக்குப் போகிறார்கள். அதனால், பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து வரும்போது வீட்டில் யாரும் இருப்பதில்லை.

  • ஒரு ஆராய்ச்சியின்படி, அமெரிக்காவில் 8-12 வயதிலுள்ள பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு மணிநேரம் எலெக்ட்ரானிக் சாதனங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள்.a

“பிள்ளைகள் இப்போதெல்லாம் அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை, . . . மற்ற பிள்ளைகளிடம்தான் கேட்கிறார்கள்” என்று ஒரு புத்தகம் (Hold On to Your Kids) சொல்கிறது.

வழிகாட்டுவது எப்படி?

உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”​—நீதிமொழிகள் 22:6.

உதவிக்காகப் பிள்ளைகள் முதலில் போவது பெற்றோரிடம்தான். சொல்லப்போனால், பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை எட்டும்போதுகூட, மற்ற பிள்ளைகளின் ஆலோசனையைவிட தங்கள் பெற்றோரின் ஆலோசனையை அதிகமாக மதிப்பார்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். “பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்வரை அவர்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் வடிவமைப்பது முக்கியமாகப் பெற்றோர்கள்தான்” என்று டாக்டர் லாரன்ஸ் ஸ்டைன்பெர்க் ஒரு புத்தகத்தில் (You and Your Adolescent) எழுதியிருக்கிறார். “உங்கள் கருத்துகளைப் பிள்ளைகள் எப்போதுமே ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள், நீங்கள் சொல்வதையும் கவனிக்கிறார்கள். இதை அவர்கள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இதுதான் உண்மை” என்றும் அவர் எழுதியிருக்கிறார்.

பிள்ளைகள் இயல்பாகவே உங்களிடம்தான் உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்பதால், எல்லா விதத்திலும் அவர்களுக்கு வழிகாட்ட முயற்சி எடுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... உங்களைப் பொறுத்தவரைக்கும் எது முக்கியம்... வாழ்க்கையில் நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்... போன்ற விஷயங்களை அவர்களிடம் சொல்லுங்கள்.

இன்னொரு வழிகாட்டியைத் தேடிக் கொடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.”​—நீதிமொழிகள் 13:20.

யாராவது ஒருவர் உங்கள் பிள்ளைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியுமென்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் பிள்ளையோடு நேரம் செலவிடும்படி ஏன் அவரிடம் கேட்கக் கூடாது? அதற்காக, உங்கள் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை இனி அவரே செய்துவிடுவார் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நீங்கள் தரும் பயிற்சியோடு சேர்த்து அவருடைய உதவியும் பிள்ளைக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஆனால், அவர் உங்கள் பிள்ளைக்கு எந்தக் கெடுதலும் செய்யாத நம்பகமான ஒருவராக இருக்க வேண்டும். பைபிளில் தீமோத்தேயு என்பவரின் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வளர்ந்த பிறகுகூட, அப்போஸ்தலன் பவுலுடைய நட்பினால் அதிக நன்மை அடைந்தார். அதேபோல், பவுலும் தீமோத்தேயுவின் நட்பினால் நன்மை அடைந்தார்.—பிலிப்பியர் 2:20, 22.

இன்றெல்லாம் கூட்டுக்குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற சொந்தபந்தங்கள் வேறொரு ஊரில்கூட வாழலாம். உங்கள் குடும்பத்திலும் இதே சூழ்நிலைதானா? அப்படியென்றால், உங்கள் பிள்ளை எந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அந்தக் குணங்களைக் காட்டுகிற மற்றவர்களோடு பழக அவனுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்.

a அந்த ஆராய்ச்சியின்படி, டீனேஜர்கள் தினமும் சராசரியாக ஒன்பது மணிநேரம் எலெக்ட்ரானிக் சாதனங்களில் மூழ்கியிருக்கிறார்கள். ஸ்கூலில் படிக்கும்போதும் வீட்டில் ஹோம்வர்க் செய்யும்போதும் அவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நேரம் இந்தப் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை.

ஒரு பெண் தன்னுடைய பழைய ஃபோட்டோக்களை ஒரு பிள்ளையிடம்காட்டுகிறாள்

இப்போதே பழக்குங்கள்

இப்போதே பெரியவர்களுடைய ஆலோசனையைக் கேட்கும் பிள்ளைகள், பிற்காலத்தில் விவேகமாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்வார்கள்

வாழ்ந்து காட்டுங்கள்

  • என் பிள்ளைகளுக்கு நான் நல்ல உதாரணமாக இருக்கிறேனா?

  • என்னைவிட அனுபவமுள்ளவர்களிடம் நான் ஆலோசனைகள் கேட்பதை என் பிள்ளைகளால் பார்க்க முடிகிறதா?

  • என் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதன் மூலம் அவர்கள் எனக்கு முக்கியம் என்பதைக் காட்டுகிறேனா?

எங்கள் அனுபவம் . . .

“சிலசமயம் நான் எதையாவது மும்முரமா செஞ்சிட்டு இருக்கறப்போ என் பொண்ணு என்கிட்ட பேசணும்னு சொல்வா. உடனே வேலைய அப்படியே போட்டுட்டு அவ சொல்றத கேட்பேன். சிலசமயம், ரெண்டு மூணு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ண சொல்வேன். அப்பத்தான், அவ சொல்றத கவனம் சிதறாம கேட்க முடியும். என் மனைவியும் நானும் அவளுக்கு நல்ல உதாரணமா இருக்க முயற்சி பண்ணுவோம். அப்பத்தான், அவளுக்கு கத்துக்கொடுக்கறத எல்லாம் நாங்களும் செய்யறோங்கறத அவளால பார்க்க முடியும்.”​—டேவிட்.

“எங்க பொண்ணு பிறந்தப்போ, அவள கவனிச்சுக்கறதுக்காக நான் வேலைய விட்டுடணும்னு என் கணவரும் நானும் முடிவு செஞ்சோம். அந்த முடிவ எடுத்ததுக்காக நான் வருத்தப்பட்டதே இல்ல. முடிஞ்ச அளவுக்கு நம்ம பிள்ளைங்க கூடவே இருக்குறது ரொம்ப முக்கியம். அப்பத்தான் அவங்களுக்கு தேவையான ஆலோசனை, அறிவுரையெல்லாம் கொடுத்து, நல்லபடியா வளர்க்க முடியும். அதுமட்டுமில்ல, பிள்ளைங்க கூடவே இருந்தாத்தான் அவங்கமேல நமக்கு எவ்ளோ அக்கறை இருக்குன்னு காட்ட முடியும்.”​—லீஸா.

பெரியவர்களோடு நேரம் செலவிடுவது

“என் பிள்ளைங்க பெரியவங்களோட நிறைய நேரம் செலவு செஞ்சாங்க. அதுவும், வித்தியாச வித்தியாசமானவங்களோட பழகுனாங்க. வாழ்க்கைய பத்தி மத்தவங்களோட அனுபவங்கள்ல இருந்து கத்துக்க அது அவங்களுக்கு உதவியா இருந்துச்சு. உதாரணத்துக்கு, என்னோட பாட்டியோட கதையை அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுப்பாங்க. பாட்டி சின்ன வயசுல இருந்தப்போ அவங்க வீட்லதான் முதல் முதல்ல கரன்ட் சப்ளை கிடைச்சுதாம். லைட்ட போடறதயும் ஆஃப் பண்றதயும் பார்க்கறதுக்காகவே அக்கம்பக்கத்துல இருந்த எல்லாரும் அவங்க சமையல்கட்டுக்கு வந்து நின்னுட்டு இருப்பாங்களாம். இந்த கதைய கேட்டப்போ என் பிள்ளைங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. பாட்டி காலத்துல வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமா இருந்துதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. அதனால, பாட்டிமேலயும் வயசானவங்க எல்லார்மேலயும் அவங்களுக்கு மதிப்பும் மரியாதையும் வந்துச்சு. பிள்ளைங்க மத்த பிள்ளைங்களோட நேரம் செலவிடறதவிட பெரியவங்களோட அதிக நேரம் செலவு செஞ்சாங்கன்னா, நிறைய விஷயங்கள கத்துப்பாங்க.”​—மராண்டா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்