17 பின்பு, யாக்கோபு எழுந்து தன்னுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றினார்.+ 18 பதான்-அராமிலே சேர்த்த எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு,+ அங்கே சம்பாதித்த எல்லா மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்திலுள்ள தன்னுடைய அப்பா ஈசாக்கிடம் போவதற்குப் புறப்பட்டார்.+