18 பேழையிலிருந்து வெளியே வந்த நோவாவின் மகன்களுடைய பெயர்கள்: சேம், காம், யாப்பேத்.+ பின்பு, காமுக்கு கானான் பிறந்தான்.+ 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியிலிருக்கிற எல்லா மனிதர்களும் இவர்களுடைய வம்சத்தில்தான் வந்தார்கள். பின்பு, மனிதர்கள் பூமி முழுவதும் பரவினார்கள்.+