-
யாத்திராகமம் 39:2-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவர்* தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை* ஆகியவற்றால் ஏபோத்தைத்+ தயாரித்தார். 3 அவர்கள் தங்கத்தைச் சன்னமான தகடுகளாக அடித்தார்கள். பின்பு அவர் அந்த நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றோடு சேர்த்து தையல்* வேலைப்பாடு செய்வதற்காக அந்தத் தங்கத் தகடுகளைச் சரிகைகளாகப் பண்ணினார். 4 அதன்பின், அவர்கள் ஏபோத்துக்கு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைத்தார்கள். 5 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை இணைத்துத் தைத்தார்கள்.+ ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்தார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்கள்.
-