-
லேவியராகமம் 5:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 “யெகோவாவின் பரிசுத்த காரியங்களுக்கு* விரோதமாக ஒருவன் தெரியாத்தனமாகப் பாவம் செய்தால்,+ எந்தக் குறையுமில்லாத செம்மறியாட்டுக் கடாவைக் குற்ற நிவாரண பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மதிப்பு எவ்வளவு என்பதைப் பரிசுத்த* வெள்ளி சேக்கலின்* கணக்குப்படி குருவானவர் தீர்மானிக்க வேண்டும்.+ 16 பரிசுத்த இடத்துக்கு விரோதமாகத் தான் செய்த பாவத்துக்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ குருவானவர் குற்ற நிவாரண பலியாகிய செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தி அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+
-
-
எண்ணாகமம் 5:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு ஆணோ பெண்ணோ ஏதோவொரு பாவத்தைச் செய்து யெகோவாவுக்குத் துரோகம் பண்ணினால் அவர் குற்றவாளியாக இருப்பார்.+ 7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும்.
-