-
யாத்திராகமம் 29:38-41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைப் பலிபீடத்தின் மேல் தினமும் நீ பலி கொடு.+ 39 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைச் சாயங்காலத்திலும் பலி கொடு.+ 40 ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து. 41 காலையில் செய்தது போலவே சாயங்காலத்திலும் இரண்டாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியை உணவுக் காணிக்கையோடும் திராட்சமது காணிக்கையோடும் பலி கொடுக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடித்த வாசனையான தகன பலியாக அதைச் செலுத்த வேண்டும்.
-
-
எண்ணாகமம் 28:4-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் காலையிலும் இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்காலத்திலும் செலுத்த வேண்டும்.+ 5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+ 6 அதுதான், சீனாய் மலையில் யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவருக்குத் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+ அந்த வாசனை அவருக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
-