-
எண்ணாகமம் 6:23-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் இஸ்ரவேலர்களை வாழ்த்தும்போது,+
24 “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்,+ அவர் உங்களைப் பாதுகாக்கட்டும்.
25 யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும்.
26 யெகோவா உங்களைக் கரிசனையோடு பார்த்து,* உங்களுக்குச் சமாதானம் தரட்டும்”+ என்று சொல்லி வாழ்த்த வேண்டும்’”
என்றார். 27 “அவர்கள் என் பெயரைச் சொல்லி இஸ்ரவேலர்களை வாழ்த்த வேண்டும்,+ நான் அவர்களுக்கு ஆசீர்வாதம் தருவேன்”+ என்றும் சொன்னார்.
-
-
1 நாளாகமம் 23:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அம்ராமின் மகன்கள்: ஆரோன்,+ மோசே.+ மகா பரிசுத்த அறையைப் புனிதமாக வைத்திருக்கும் பொறுப்பு ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.+ அதோடு, யெகோவாவின் சன்னிதியில் பலிகளைச் செலுத்துவதும், அவருக்குச் சேவை செய்வதும், எப்போதும் கடவுளின் சார்பாக மக்களை ஆசீர்வதிப்பதும் இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+
-