-
1 ராஜாக்கள் 18:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 உடனடியாக, யெகோவா அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து, தகன பலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் சுட்டெரித்தது.+ வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சியது.+ 39 மக்கள் எல்லாரும் அதைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாய் விழுந்து, “யெகோவாதான் உண்மையான கடவுள்! யெகோவாதான் உண்மையான கடவுள்” என்று சொன்னார்கள்.
-
-
2 நாளாகமம் 7:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 வானத்திலிருந்து நெருப்பு வந்ததையும், ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்ததையும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அங்கே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள், “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று புகழ்ந்து பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.
-