-
எண்ணாகமம் 22:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதற்கு பிலேயாம் உண்மைக் கடவுளிடம், “மோவாபின் ராஜாவும் சிப்போரின் மகனுமாகிய பாலாக் இவர்களை என்னிடம் அனுப்பி, 11 ‘எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள். எனக்காக நீங்கள் வந்து அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தியடிக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான்.
-
-
நெகேமியா 13:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அன்று ஜனங்களுக்கு முன்னால் மோசேயின் புத்தகம் வாசிக்கப்பட்டது.+ அதில், உண்மைக் கடவுளுடைய சபையின் பாகமாக ஆவதற்கு அம்மோனியர்களையும் மோவாபியர்களையும்+ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது.+ 2 ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு உணவும் தண்ணீரும் தரவில்லை. அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களைச் சபிக்கச் சொல்லி பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ ஆனால், எங்கள் கடவுள் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+
-