2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.
7 அங்கே இஸ்ரவேலர்கள் அவரோடு தகராறு செய்ததாலும், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்ததாலும்,+ அவர் அந்த இடத்துக்கு மாசா*+ என்றும், மேரிபா*+ என்றும் பெயர் வைத்தார்.
8 வனாந்தரத்தில் அவரைச் சோதித்துப் பார்த்த நாளன்று அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்;+9 அங்கே அவர்கள் 40 வருஷங்களாக நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னைச் சோதித்தார்கள்.+