-
எண்ணாகமம் 13:23-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை*+ அடைந்து, அங்கே ஒரு திராட்சைக் கொடியிலிருந்த ஒரு குலையை அறுத்தார்கள். அதை இரண்டு பேர் ஒரு கம்பத்தில் கட்டித் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. சில மாதுளம்பழங்களையும் அத்திப்பழங்களையும்கூட அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.+ 24 அந்த இஸ்ரவேலர்கள் அங்கே திராட்சைக் குலையை அறுத்ததால் அந்த இடத்துக்கு எஸ்கோல்* பள்ளத்தாக்கு+ என்று பெயர் வைக்கப்பட்டது.
25 இப்படி, அவர்கள் அந்தத் தேசத்தை 40 நாட்கள்+ உளவு பார்த்துவிட்டு, 26 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள். 27 அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய தேசத்துக்கு நாங்கள் போனோம். அது நிஜமாகவே பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான்.+ இதெல்லாம் அங்கு விளைந்ததுதான்.+
-