-
உபாகமம் 4:10-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் நின்ற நாளில் யெகோவா என்னிடம், ‘என் வார்த்தைகளைக் கேட்பதற்காக+ இந்த ஜனங்களை என்னிடம் ஒன்றுகூடிவரச் செய். அப்போது, இந்தப் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்கள் எனக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்கள்,+ தங்களுடைய பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுப்பார்கள்’+ என்றார்.
11 அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+ 12 அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+ 13 நீங்கள் கடைப்பிடிப்பதற்காக பத்துக் கட்டளைகளைக்+ கொடுத்து, உங்களோடு ஒரு ஒப்பந்தத்தை அவர் செய்தார்.+ பின்பு, அந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.+
-