-
1 சாமுவேல் 28:7-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 கடைசியில், சவுல் தன்னுடைய ஊழியர்களிடம், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.+ நான் அவளிடம் போய் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்” என்றார். அதற்கு அவர்கள், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண் எந்தோரில்+ இருக்கிறாள்” என்று சொன்னார்கள்.
8 அதனால், சவுல் அந்தப் பெண்ணைப் பார்க்க மாறுவேடத்தில் இரண்டு ஆட்களோடு ராத்திரியில் போனார். அவர் அவளிடம், “உன்னுடைய மந்திர சக்தியால் ஆவியுலகத்தோடு தொடர்புகொண்டு+ நான் சொல்கிற ஆளைத் தயவுசெய்து கூப்பிடு” என்றார். 9 ஆனால் அவள், “ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் தேசத்திலிருந்து சவுல் துரத்தியடித்த விஷயம்+ உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தும், என் உயிருக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்களா?”+ என்று கேட்டாள். 10 அப்போது சவுல், “உனக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது, இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி, யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து கொடுத்தார். 11 அந்தப் பெண், “உங்களுக்காக நான் யாரைக் கூப்பிட வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு சவுல், “சாமுவேலைக் கூப்பிடு” என்றார்.
-