-
நியாயாதிபதிகள் 11:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அப்போது, இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவிடம் தூதுவர்களை அனுப்பி,+ “தயவுசெய்து உங்கள் தேசத்தின் வழியாகக் கடந்துபோக எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள், ஆனால் ஏதோமின் ராஜா ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல் மோவாபின்+ ராஜாவிடமும் கேட்டார்கள், அவனும் சம்மதிக்கவில்லை. அதனால், இஸ்ரவேலர்கள் காதேசிலேயே+ தங்கினார்கள். 18 வனாந்தரம் வழியாக அவர்கள் நடந்துபோனபோது, ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிக்கொண்டு போனார்கள்.+ அவர்கள் மோவாப் தேசத்துக்குக் கிழக்கே போய்,+ மோவாபின் எல்லைக்குள்+ வருவதற்குப் பதிலாக அதன் எல்லையில் இருந்த அர்னோனின் சுற்றுவட்டாரத்திலேயே முகாம்போட்டார்கள்.
-
-
2 நாளாகமம் 20:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இப்போது பாருங்கள்! அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்கிறவர்களும் எங்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வந்தபோது இவர்களுடைய தேசத்தைப் பிடிக்க வேண்டாமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள், அதனால் இஸ்ரவேலர்களும் இவர்களை அழிக்காமல் விலகிப் போனார்கள்.+
-