-
1 சாமுவேல் 14:47, 48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
47 சவுல் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சுற்றிலும் இருந்த எதிரிகளான மோவாபியர்களோடும்,+ அம்மோனியர்களோடும்,+ ஏதோமியர்களோடும்,+ சோபாவின்+ ராஜாக்களோடும், பெலிஸ்தியர்களோடும்+ போர் செய்தார். படையெடுத்துப் போன எல்லா இடங்களிலும் அவர்களைத் தோற்கடித்தார். 48 அவர் வீரத்தோடு போர் செய்து அமலேக்கியர்களை+ ஜெயித்தார். சூறையாடுகிறவர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.
-
-
1 சாமுவேல் 15:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பின்பு சாமுவேல் சவுலிடம், “யெகோவா என்னை அனுப்பி உன்னை இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்,+ இல்லையா? இப்போது, யெகோவா சொல்வதைக் கேள்.+ 2 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களோடு போர் செய்த அமலேக்கியர்களை நான் பழிவாங்கப்போகிறேன்.+ 3 இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.
-