உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 9:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்த ஆலயம் மண்மேடாகும்.+ இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்; ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’ என்று கிண்டலாக* கேட்பார்கள்.+ 9 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த இவர்களுடைய கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு, மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள். அதனால்தான், இந்தக் கஷ்டத்தையெல்லாம் யெகோவா இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.

  • 2 நாளாகமம் 7:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இந்த ஆலயம் மண்மேடாகும். இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்;+ ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’+ என்று கேட்பார்கள். 22 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த+ இவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள்.+ அதனால்தான் இந்தக் கஷ்டத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.

  • எரேமியா 22:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்த நகரத்தின் வழியாகப் போகிற மற்ற ஜனங்கள், “இவ்வளவு பெரிய நகரத்தை யெகோவா ஏன் இப்படி அழித்துவிட்டார்?”+ என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள். 9 “அவர்கள் தங்களுடைய கடவுளான யெகோவாவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, மற்ற தெய்வங்களைக் கும்பிட்டதால்தான் அவர் அழித்துவிட்டார்”+ என்று சொல்லிக்கொள்வார்கள்.”’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்