-
1 நாளாகமம் 14:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்போது தாவீது கடவுளிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். 11 அதனால் தாவீது பாகால்-பிராசீமுக்குப்+ போய், பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் உண்மைக் கடவுள் என் எதிரிகளை அழித்துப்போட்டார், என் மூலம் இதைச் செய்தார்” என்று சொன்னார். அதனால், அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்* என்று பெயர் வைத்தார்கள். 12 பெலிஸ்தியர்கள் தங்களுடைய சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அவற்றை எரித்துப்போடச் சொல்லி தாவீது கட்டளையிட்டார், அதன்படியே வீரர்கள் அவற்றை எரித்துப்போட்டார்கள்.+
-