-
1 நாளாகமம் 14:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பின்பு, பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள்மீது பெலிஸ்தியர்கள் மறுபடியும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள்.+ 14 தாவீது மறுபடியும் உண்மைக் கடவுளிடம் விசாரித்தார்; அதற்கு அவர், “நீ அவர்களை நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்.+ பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய். 15 படைகள் அணிவகுத்து வருகிற சத்தம் பேக்கா புதர்ச்செடிகளுக்கு மேலே கேட்கும்போது உடனே தாக்கு. ஏனென்றால், பெலிஸ்தியர்களின் படையைத் தாக்குவதற்கு உண்மைக் கடவுள் உனக்கு முன்னால் போயிருப்பார்”+ என்று சொன்னார். 16 உண்மைக் கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார்.+ பெலிஸ்திய வீரர்களை கிபியோன்முதல் கேசேர்வரை+ தாவீதின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். 17 தாவீதின் புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது. எல்லா தேசத்து மக்களும் அவரைப் பார்த்துப் பயந்து நடுங்கும்படி யெகோவா செய்தார்.+
-