-
யோசுவா 20:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எரிகோவுக்குக் கிழக்கிலே, ரூபன் கோத்திரத்துக்குச் சொந்தமான பீடபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசர்,+ காத் கோத்திரத்துக்குச் சொந்தமான கீலேயாத்திலுள்ள ராமோத்,+ மனாசே கோத்திரத்துக்குச் சொந்தமான பாசானிலுள்ள கோலான்+ ஆகிய நகரங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.+
9 அந்த நகரங்கள் அடைக்கல நகரங்களாகப் பிரித்து வைக்கப்பட்டன. தெரியாத்தனமாகக் கொலை செய்துவிடுகிற இஸ்ரவேலனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ தப்பியோடுவதற்காகவும்,+ ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படுவதற்கு முன்பே பழிவாங்குபவனால் கொல்லப்படாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.+
-
-
1 ராஜாக்கள் 4:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இஸ்ரவேல் முழுவதையும் கவனித்துக்கொள்ள 12 நிர்வாகிகளை சாலொமோன் நியமித்திருந்தார். ராஜாவுக்கும் அவருடைய அரண்மனையில் இருந்தவர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வருஷத்தில் ஒவ்வொரு மாதம் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+
-
-
1 ராஜாக்கள் 4:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ராமோத்-கீலேயாத்தை+ கேபேரின் மகன் நிர்வகித்தார் (மனாசேயின் வம்சத்தில் வந்த யாவீரின்+ சிற்றூர்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவை கீலேயாத்தில்+ இருந்தன; பாசானிலுள்ள+ அர்கோப்+ பிரதேசமும் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தப் பகுதியில் மதில்களும் செம்புத் தாழ்ப்பாள்களும் கொண்ட 60 பெரிய நகரங்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன);
-