-
ஏசாயா 7:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவை ஆட்சி செய்துவந்தார்.+ அப்போது, சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும்+ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆனால், அவர்களால்* அதைக் கைப்பற்ற முடியவில்லை.+ 2 “எப்பிராயீமோடு* சீரியா கூட்டுச் சேர்ந்துவிட்டது” என்ற செய்தி தாவீதின் வம்சத்தாருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆகாசும் அவருடைய ஜனங்களும் அதைக் கேட்டபோது, காட்டிலுள்ள மரங்கள் காற்றில் ஆடுவது போல ஆடிப்போனார்கள்.
-