-
உபாகமம் 12:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 உங்கள் கடவுளாகிய யெகோவா, நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்திலுள்ள ஜனங்களை அழித்துவிட்டு+ உங்களை அங்கே குடியேற்றும்போது, 30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள். 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+
-