உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 21:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை, அதாவது பூஜைக் கம்பத்தை,* கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் யெகோவா இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும், இந்த ஆலயத்திலும், என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+ 8 இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும், அதாவது என்னுடைய ஊழியன் மோசே கொடுத்த திருச்சட்டம் முழுவதையும், அப்படியே அவர்கள் பின்பற்றி நடந்தால்+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்தைவிட்டு ஒருபோதும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்.”+ 9 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+

  • 2 ராஜாக்கள் 23:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதனால் யெகோவா, “இஸ்ரவேலை என் கண் முன்னாலிருந்து நீக்கியதுபோல்+ யூதாவையும் நீக்கிவிடுவேன்;+ நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தை ஒதுக்கித்தள்ளுவேன்; ‘என் பெயர் இங்கே நிலைத்துநிற்கும்’+ என்று எந்த ஆலயத்தைப் பற்றி சொன்னேனோ அந்த ஆலயத்தையும் நிராகரிப்பேன்” என்று சொன்னார்.

  • 2 நாளாகமம் 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இந்த ஆலயத்தில் என்னுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதற்காக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்து புனிதப்படுத்தினேன்;+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்