-
2 ராஜாக்கள் 22:3-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 யோசியா ராஜா தான் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனும் செயலாளருமான சாப்பானை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினார்;+ அப்போது சாப்பானிடம், 4 “நீங்கள் போய் தலைமைக் குரு இல்க்கியாவைப்+ பாருங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கென்று காணிக்கையாக மக்கள் கொண்டுவந்த எல்லா பணத்தையும் வாயிற்காவலர்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.+ அதை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளும்படி இல்க்கியாவிடம் சொல்லுங்கள்.+ 5 யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும். மேற்பார்வையாளர்கள் அந்தப் பணத்தை யெகோவாவின் ஆலயத்தை* பழுதுபார்க்கிறவர்களுக்குக் கொடுக்க வேண்டும்;+ 6 அதாவது கைத்தொழிலாளிகள், கட்டிடக் கலைஞர்கள், கொத்தனார்கள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டும். அதோடு, ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் செதுக்கிய கற்களையும் வாங்குவதற்கும் அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும்.+
-