-
2 ராஜாக்கள் 17:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களையும் இஸ்ரவேல் மக்கள் செய்துவந்தார்கள்,+ அவற்றைவிட்டு விலகவில்லை. 23 யெகோவா தன்னுடைய ஊழியர்களான எல்லா தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்தபடியே+ அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்கும்வரை அப்படியேதான் செய்துவந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தேசத்திலிருந்து அசீரியாவுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்,+ அவர்கள் இன்றுவரை அங்குதான் இருக்கிறார்கள்.
-
-
2 ராஜாக்கள் 25:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
-