உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 36:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+

  • ஏசாயா 42:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யாக்கோபைச் சூறையாட அனுமதித்தது யார்?

      இஸ்ரவேலைக் கொள்ளையடிக்க அனுமதித்தது யார்?

      யெகோவாதானே அனுமதித்தார்? அவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.

      அவருடைய வழியில் நடக்காமல்போனார்கள்.

      அவருடைய சட்டத்துக்கு* கீழ்ப்படியாமல்போனார்கள்.+

  • எரேமியா 40:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, காவலாளிகளின் தலைவன் எரேமியாவைத் தனியாகக் கூப்பிட்டு, “இந்த நகரத்துக்கு வந்திருக்கிற அழிவைப் பற்றி உன் கடவுளாகிய யெகோவா முன்பே சொல்லியிருந்தார். 3 யெகோவா அதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், நீங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தீர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்