-
எஸ்றா 4:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா, பென்யமீன் ஜனங்கள் திரும்பி வந்து+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு ஆலயம் கட்டிக்கொண்டிருந்ததை எதிரிகள்+ கேள்விப்பட்டார்கள். 2 உடனே அவர்கள் செருபாபேலிடமும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் போய், “உங்களோடு சேர்ந்து நாங்களும் ஆலயத்தைக் கட்ட விரும்புகிறோம். உங்களுடைய கடவுளைத்தான் நாங்களும் வணங்குகிறோம்.+ எங்களை இங்கு கொண்டுவந்த+ அசீரிய ராஜா எசரத்தோனின்+ காலத்திலிருந்தே உங்கள் கடவுளுக்குப் பலி செலுத்திவருகிறோம்” என்றார்கள். 3 அதற்கு செருபாபேலும் யெசுவாவும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும், “எங்களோடு சேர்ந்து எங்கள் கடவுளுக்கு ஆலயத்தைக் கட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ பெர்சிய ராஜா கோரேஸ் எங்களுக்கு ஆணை கொடுத்தபடி,+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு நாங்கள் மட்டும்தான் ஆலயம் கட்டுவோம்” என்று சொன்னார்கள்.
-