19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.
32 அப்போது சாமுவேல், “அமலேக்கிய ராஜா ஆகாகை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அப்போது, ஆகாக் அவரிடம் தயங்கித் தயங்கிப் போனான்.* ஏனென்றால், இனி தன்னுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று அவன் நினைத்திருந்தான்.