-
நீதிமொழிகள் 7:14-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 “நான் சமாதான பலி செலுத்த வேண்டியிருந்தது,+
என் நேர்த்திக்கடன்களை இன்று செலுத்திவிட்டேன்.
15 அதனால், உன்னைப் பார்க்க வந்தேன்.
உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், இப்போது கண்டுபிடித்துவிட்டேன்!
16 என் மெத்தையில் அருமையான விரிப்பை விரித்து வைத்திருக்கிறேன்,
எகிப்து தேசத்துப் பலவண்ண நாரிழை* விரிப்பைப்+ போட்டு வைத்திருக்கிறேன்.
17 என் படுக்கையில் வெள்ளைப்போளத்தையும்* அகிலையும்* லவங்கத்தையும் தூவி வைத்திருக்கிறேன்.+
18 என்னோடு வா, காலைவரை காதல் ரசத்தை நாம் பருகலாம்.
விடியும்வரை உல்லாசமாக இருக்கலாம்.
19 ஏனென்றால், என் புருஷன் வீட்டில் இல்லை.
ரொம்பத் தூரம் பிரயாணம் போயிருக்கிறார்.
20 பை நிறைய பணம் கொண்டுபோயிருக்கிறார்.
பௌர்ணமிவரை திரும்பிவர மாட்டார்” என்று சொன்னாள்.
21 அவள் இனிக்க இனிக்கப் பேசி அவனைத் தன் பக்கம் இழுத்தாள்.+
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அவனை மயக்கினாள்.
-