11 உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு,+ நிறைய நாட்களுக்குப் பிறகு அது மறுபடியும் உனக்குக் கிடைக்கும்.+ 2 உன்னிடம் இருப்பதை ஏழு பேருக்குக் கொடு, எட்டுப் பேருக்குக்கூட கொடு.+ ஏனென்றால், இந்த உலகத்துக்கு எப்படிப்பட்ட பேராபத்து வருமென்று உனக்குத் தெரியாதே.