-
2 ராஜாக்கள் 17:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 தங்களுடைய கடவுளான யெகோவா தந்த எல்லா கட்டளைகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு உலோகக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்கள்,+ பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்கள்;+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டார்கள்,+ பாகாலை வழிபட்டார்கள்.+ 17 தங்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்,*+ குறி கேட்டார்கள்,+ சகுனம் பார்த்தார்கள், யெகோவாவைப் புண்படுத்துவதற்காக அவர் வெறுக்கிற காரியங்களை வேண்டுமென்றே செய்துவந்தார்கள்.
-
-
எரேமியா 32:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 இந்த நகரத்துக்கு எதிராகப் போர் செய்கிற கல்தேயர்கள் உள்ளே வந்து முழு நகரத்தையும் கொளுத்திவிடுவார்கள். இங்கே இருக்கிற எல்லா வீடுகளும் சாம்பலாகும்.+ ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில்தான் ஜனங்கள் பாகாலுக்குப் பலிகளையும், மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமது காணிக்கையையும் செலுத்தி என் கோபத்தைக் கிளறினார்கள்.’+
-