-
ஏசாயா 2:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+
4 ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.
பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.
அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.
ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+
ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.
போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+
-
-
ஏசாயா 11:6-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+
வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.
கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+
ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.
7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.
அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.
சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+
8 பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.
பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.
-
-
மீகா 4:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.
-