உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 32:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி, அசீரிய ராஜாவின் முகாமில் இருந்த மாவீரர்கள், அதிகாரிகள், படைத் தலைவர்கள் என ஒருவர் விடாமல் எல்லாரையும் கொன்றுபோட்டார்.+ அதனால், அசீரிய ராஜா தன்னுடைய தேசத்துக்கு அவமானத்தோடு திரும்பிப் போனான். பின்பு, அவன் தன்னுடைய கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+ 22 இப்படி, அசீரிய ராஜா சனகெரிப்பிடமிருந்தும் மற்ற எதிரிகள் எல்லாரிடமிருந்தும் எசேக்கியாவையும் எருசலேம் மக்களையும் யெகோவா காப்பாற்றினார்; அதனால் சுற்றியிருந்த எதிரிகளின் தொல்லையில்லாமல் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

  • ஏசாயா 30:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யெகோவாவின் சத்தத்தால் அசீரியா நடுநடுங்கும்.+

      அதை ஒரு தடியால் அவர் அடிப்பார்.+

  • ஏசாயா 31:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.

      அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+

      அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.

      வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.

  • ஏசாயா 37:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பின்பு, யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். ஜனங்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 37 அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்