11ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள்.
17 ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய நகரங்கள் மறுபடியும் நல்ல காரியங்களால் நிரம்பி வழியும்; யெகோவாவாகிய நான் மறுபடியும் சீயோனை ஆறுதல்படுத்துவேன்,+ எருசலேமைத் திரும்பவும் தேர்ந்தெடுப்பேன்”’+ என்று இன்னும் ஒரு தடவை சத்தமாக அறிவிப்பு செய்” என்றார்.