உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 5:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது யெகோவாவின் ஆலயத்தை மேகம் சூழ்ந்துகொண்டது.+

  • எஸ்றா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.

  • சங்கீதம் 106:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 106 “யா”வைப் புகழுங்கள்!*

      யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+

      அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

  • ஏசாயா 12:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அந்த நாளில் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள்:

      “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

      அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+

      அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்.+

  • மீகா 7:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.

      உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+

      நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.

      ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்