-
எரேமியா 5:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 “அவர்கள் உன்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவா ஏன் எங்களுக்கு இப்படியெல்லாம் செய்துவிட்டார்?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவரை விட்டுவிட்டு வேறு தெய்வங்களுக்கு அடிபணிந்ததால், உங்கள் தேசத்திலிருந்து வேறு தேசத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஜனங்களுக்கு அடிபணிந்து நடப்பீர்கள்’+ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.”
-
-
எரேமியா 16:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நீ இந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லும்போது அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்? எங்கள் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அப்படியென்ன பாவத்தைச் செய்துவிட்டோம்?’+ என்று கேட்பார்கள். 11 அப்போது நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “உங்கள் முன்னோர்கள் என்னை விட்டுவிட்டு+ வேறு தெய்வங்களைத் தேடிப்போய் பக்தியோடு கும்பிட்டார்கள்.+ என்னைவிட்டு விலகிப்போனார்கள். என் சட்டதிட்டங்களை மீறினார்கள்.+
-