-
எரேமியா 8:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தச் சமயத்தில் யூதாவுடைய ராஜாக்கள், அதிகாரிகள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், எருசலேம் ஜனங்கள் எல்லாருடைய எலும்புகளும் அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்டு, 2 சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் முன்பாகப் பரப்பி வைக்கப்படும். இந்த வானத்துப் படைகளைத்தானே அவர்கள் ஆசை ஆசையாக வணங்கினார்கள்!+ பக்தியோடு கும்பிட்டார்கள்! உதவிக்காகக் கூப்பிட்டார்கள்! அவர்களுடைய எலும்புகள் அள்ளப்படாமலும் புதைக்கப்படாமலும் அப்படியே விடப்பட்டு, நிலத்தில் எருவாகிவிடும்.”+
-
-
செப்பனியா 1:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன்.
எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன்.
பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+
பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+
5 மொட்டைமாடிக்குப் போய் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கும்பிடுகிறவர்களையும்,+
யெகோவாவை மட்டும் வணங்குவதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டு,+
மல்காமிடமும் அதேபோல் வாக்குக் கொடுக்கிறவர்களையும் நான் அழிப்பேன்.+
-