-
எரேமியா 19:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 எருசலேம் ஜனங்களுடைய வீடுகளும் யூதாவின் ராஜாக்களுடைய அரண்மனைகளும் இந்த தோப்பேத்தைப்+ போலவே அசுத்தமாகும். ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில் அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் பலி செலுத்துகிறார்கள்.+ பொய் தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்’”+ என்று சொன்னார்.
-
-
செப்பனியா 1:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன்.
எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன்.
பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+
பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+
5 மொட்டைமாடிக்குப் போய் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கும்பிடுகிறவர்களையும்,+
யெகோவாவை மட்டும் வணங்குவதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டு,+
மல்காமிடமும் அதேபோல் வாக்குக் கொடுக்கிறவர்களையும் நான் அழிப்பேன்.+
-