உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்.*+

      ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார்.

      அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்.

      கறவை* ஆடுகளை மெதுவாக* நடத்திக்கொண்டு போவார்.+

  • எசேக்கியேல் 34:11-13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்.+ 12 சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன். 13 எல்லா தேசங்களின் நடுவிலிருந்தும் ஜனங்களின் நடுவிலிருந்தும் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் தேசமான இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து மலைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் ஜனங்கள் குடியிருக்கிற பகுதிகளிலும் மேய்ப்பேன்.+

  • மீகா 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+

      தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.

      மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+

      ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்