-
எபிரெயர் 8:8-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஆனால், கடவுள் தன் மக்களுடைய குறையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்: “‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் நான் ஒரு புதிய ஒப்பந்தம் செய்வேன்’ என்று யெகோவா* சொல்கிறார். 9 ‘அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது+ செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதையே நான் விட்டுவிட்டேன்’ என்றும் யெகோவா* சொல்கிறார்.
10 ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான்’ என்று யெகோவா* சொல்கிறார். ‘நான் அவர்களுடைய மனதில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+
11 அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சக குடிமகனிடமோ தங்கள் சகோதரனிடமோ, “யெகோவாவை* பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். 12 அவர்களுடைய அநீதியான செயல்களை இரக்கத்தோடு நான் மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்றும் அவர் சொல்கிறார்.”+
-