-
ஏசாயா 51:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 உன் எஜமானும், தன்னுடைய ஜனங்களுக்காக வழக்காடுகிற கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“என்னுடைய கோபம் என்ற கோப்பையை உன் கையிலிருந்து எடுத்துவிடுவேன்.
தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து+
இனி ஒருபோதும் நீ குடிக்க மாட்டாய்.+
23 உனக்குக் கொடுமை செய்கிறவர்களின் கையில் அதைக் கொடுப்பேன்.+
அவர்கள் உன்னிடம், ‘நீ குப்புற விழு, உன்மேல் ஏறி நடக்க வேண்டும்!’ என்று சொன்னார்கள்.
நீயும் தரையில் குப்புற விழுந்து உன் முதுகைக் காட்டினாய்.
அவர்கள் தெருவில் நடப்பதுபோல் உன் முதுகின் மேல் ஏறி நடந்தார்கள்.”
-